Your_license-key_here
4375559109068623318
தமிழ் விழுதுகளுக்கு நல்வரவு

USS தேர்வு வழிகாட்டுதல்கள்

6 min



கேரள அரசு 

பொதுத் தேர்வு பிரிவு 

எல்.எஸ்.எஸ் & யு.எஸ்.எஸ் தேர்வு

பிப்ரவரி - 2020


அறிவிப்பு 


பூஜாப்புரா, 

தேர்வு ஆணையர் அலுவலகம் 

திருவனந்தபுரம் - 12 



எண். X. / H-1 / 42572/2019 /                               

CGE தேர்வுகள் ஆணையரின் அலுவலகம் 
தேர்வு இல்லம், பூஜாப்புரா,
திருவனந்தபுரம் - 12
தேதி: 20/12/2019 


அறிவிப்பு 

பொருள் : -     2019-20 கல்வியாண்டிற்கான எல்.எஸ்.எஸ் மற்றும் யு.எஸ்.எஸ். தேர்வுகளை நடத்துதல் - பற்றி 

குறிப்பு : -     1. G.O (RT) No.105/2011 G.Edn. தேதி 06/01/2011 

            2. G.O. (0൦ PM. 5662/2015. தேதி: 30/11/2015 


மேற்கண்ட குறிப்பில் அரசு ஆணைப்படி, எல். எஸ்.எஸ் தேர்வு மற்றும் யு.எஸ்.எஸ் தேர்வு  பின்வருமாறு நடத்தப்படுகிறது.



தேர்வின் பெயர்

தேதி

நேரம்

எல். எஸ்.எஸ் தேர்வு

பிப்ரவரி 29, 2020

தாள் - 1: காலை 10.15 முதல் மதியம் 12.00 மணி வரை .

தாள் - 2: பிற்பகல்  1.15 முதல் 3.00 மணி வரை .

யு.எஸ்.எஸ் தேர்வு

பிப்ரவரி 29, 2020

தாள் - 1: காலை 10.15 முதல் மதியம் 12.00 மணி வரை .

தாள் - 2: பிற்பகல்  1.15 முதல் 3.00 மணி வரை .



யு.எஸ்.எஸ் தேர்வு வழிகாட்டுதல்கள் 

1. யு.எஸ்.எஸ். தேர்வு எழுத தகுதி


கேரளாவில் அரசு / உதவி பெறும் / அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறாத பள்ளிகளில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் யுஎஸ்எஸ் தேர்வு எழுத தகுதியானவர்கள். 


ஏழாம் வகுப்பின் முதல் பருவத் தேர்வில் பெறப்பட்ட தரங்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு இரண்டு அளவுகோல்கள் உள்ளன. 


(a) அனைத்து பாடங்களும் 'A 'தரம் (மொழி பாடங்கள் மற்றும் அறிவியல் பாடங்கள்.) 

(b) மொழி பாடங்களில் 2 தாள்கள் A தரம் மற்றும் ஒரு B தரம்.

(c) அறிவியல் பாடங்களில் (கணிதம், அடிப்படை அறிவியல், சமூக அறிவியல்) இரு “A” தரமும், ஒரு “B” தரமும் கொண்டவர்கள்.

குறிப்பு: கலை - விளையாட்டு - (work experience, கணித, சமூக அறிவியல், வித்யாரங்கம் விழாக்களில் துணை மாவட்ட அளவில், “A” தரம் / முதல் இடத்தைப் பெற்றவர்கள் இரண்டாம் அளவுகோலுக்கு தகுதி பெறுவார்கள்.


மேற்கண்ட இரண்டு தேர்வுகளுக்கும் மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 13/1/2020 முதல் 21/1/2020 வரை ஆன்லைனில் தேர்வுக்குத் தகுதியான மாணவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்.


2. பாடத்திட்டம் மற்றும் தேர்வின் தன்மை.


யுஎஸ்எஸ் தேர்வுக்கான ஏழாம் வகுப்பு பாடங்களின் கேள்விகள் 2020 ஜனவரி 31 வரை கற்பிக்கப்பட்டவற்றிலிருந்து கேட்கப்படும். 


 ஏழாம் வகுப்பு வரை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய கற்றல் சாதனைகள் (கருத்துகள், உணர்வுகள், திறன்கள் மற்றும் அணுகுமுறைகள்) கருத்தில் கொண்டு யுஎஸ்எஸ் தேர்வுக்கான கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன.


தேர்வின் குறிக்கோள் (objectivity) மற்றும் நம்பகத்தன்மையை (reliability) பராமரிக்க கொள்குறி தேர்வு கேள்விகள் (Multiple choice test items) இந்த தேர்வில் சேர்க்கப்படும். 


பின்வரும் சிந்தனை திறனைப் பயன்படுத்தி கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் மற்றும் அதிக திறன்களில் கவனம் செலுத்த வேண்டும். 

அறிவைப் பெறுதல் 

அறிவின் பயன்பாடு 

பகுப்பாய்வு 

மதிப்பீடு / முடிவெடுத்தல் 

படைப்பாற்றல்


3. தேர்வின் அமைப்பு

யு.எஸ்.எஸ். தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும்


 தாள் (1) முதல் மொழி மற்றும் கணிதம் (இதில் 3 பாகங்கள் உள்ளன) 


பகுதி  (அ): முதல் மொழி (பகுதி 1) A.T மலையாளம் / கன்னடம் / தமிழ் / அரபு & / உருது / சமஸ்கிருதம் 

பகுதி (ஆ); முதல் மொழி (பகுதி 2) B.T மலையாளம் / கன்னடம் / தமிழ் 

பகுதி (இ): கணிதம் 


தாள் (2) ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூகவியல் (இதிலும்ம் 3 பாகங்கள் உள்ளன) 

பகுதி (அ) : ஆங்கிலம்

பகுதி (ஆ): அடிப்படை அறிவியல்

பகுதி (இ): சமூக அறிவியல் 


முதல் தாளின் தேர்வு நேரம் காலை 10.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஆகும். இவற்றில் முதல் 15 நிமிடங்கள் ஆறுதல் நேரமாக (cool of time) பயன்படுத்தப்பட வேண்டும். 1.15 முதல் 3 வரை இரண்டாவது தாளின் தேர்வு நேரம் நண்பகல் வரை. இங்கேயும், 15 நிமிட நேரம் ஆறுதல் நேரமாக பயன்படுத்தவும் (cool of time). 


முதல் தாளில் 50 கேள்விகள் இருக்கும். இவற்றில் 45 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும்.


 இரண்டாவது தாளில் 55 கேள்விகள் இருக்கும். இவற்றில் 45 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும்.


ஒரு தாளிற்குற்கு 90 நிமிடங்கள் இருக்க வேண்டும். 


ஒவ்வொரு தாளிற்கும் உள்ள கேள்விகளின் எண்ணிக்கை பின்வருமாறு:


தாள் (1) 


பகுதி (அ): முதல் மொழி (பகுதி 1) : - 15 

பகுதி (ஆ): முதல் மொழி (பகுதி 2) - 15 (அதிகபட்ச மதிப்பெண் 10.) 

பகுதி  (இ): கணிதம் - 20 

----------------------------------------------------------------------------------------------------------------------

மொத்த மதிப்பெண்:   50

----------------------------------------------------------------------------------------------------------------------


தாள் (2) 


பகுதி (அ):  ஆங்கிலம் - 15 

பகுதி (ஆ): அடிப்படை அறிவியல் - 20 (அதிகபட்ச மதிப்பெண் 15) 

பகுதி (இ): சமூக அறிவியல் - 20 (அதிகபட்ச மதிப்பெண் 15) 

----------------------------------------------------------------------------------------------------------------------

மொத்த மதிப்பெண் 55

----------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் . விடை எழுத வேண்டியது 45 + 45 = 90 வினாக்களுக்கு. எனவே, அதிகபட்ச மதிப்பெண் 90 ஆக இருக்கும்.


ஒவ்வொரு பாடப்பகுதியிலிருந்தும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறந்களை அடிப்படையாக் கொண்ட கேள்விகள் இருக்கும். 


முதல் மொழி (பகுதி 2), சமூகஅறிவியல் மற்றும் அடிப்படைகளில் ஒவ்வொரு பாடமும் மற்றும் கலை, இலக்கியம், சுகாதாரம் மற்றும் விளையாட்டு தொடர்பானவற்றில் முறையே ஐந்து கேள்விகள் அமையும்.


கணித வினாக்களில் பகுத்தறிவு (reasoning) மற்றும்  மன திறன் (mental ability) சரிபார்தல் கேள்விகளும் இருக்கும். 


தாள்1 பகுதி (அ) இல், ஒவ்வொரு பாடத்திற்கும் (மொழிகள்) 1 முதல் 15 வரை கேள்விகள் அமையும். இது போன்று பகுதி 1 (ஆ) வில் ஒவ்வொன்றிற்கும் வினாக்கள்  16 முதல் 30 வரை இருக்கும். பகுதி-சி இல் கேள்விகளின் வரிசை எண் 31 முதல் 50 வரை இருக்கும். 


தாள்  2  பகுதி (அ) (ஆங்கிலம்) இல்  உள்ள கேள்விகள் 1 முதல் 15 வரையிலும், பகுதி (ஆ)  (அடிப்படை அறிவியல்) இல் உள்ள கேள்விகள் 16 முதல் 35 வரை அமையும். பகுதி-சி (சமூக அறிவியல்) இல் உள்ள கேள்விகள் 36 முதல் 55 வரையும் அமையும்.


4. தேர்வுக் குழு


தேர்வை சீராக நடத்துவதற்கு மாவட்ட மற்றும் துணை மாவட்ட அளவில் தேர்வுக் குழுக்கள் இருக்க வேண்டும். மாவட்ட அளவில், டி.டி.இ (தலைவர்), டயட்-பிரின்சிபல் (கன்வீனர், டி.பி.ஓ (எஸ்.எஸ்.ஏ) மற்றும் டி.இ.ஓக்கள் (உறுப்பினர்கள்)) மற்றும் உப மாவட்டத்தில், ஏ.இ.ஓ (கன்வீனர்), டயட் ஆசிரியர் ( உறுப்பினர்) மற்றும் பிபிஓ SSA (உறுப்பினர்).  தேர்வு நடத்துதல் குறித்து கலந்துரையாடியிரருக்க வேண்டும். 


5. வினாத்தாள்களை தயாரித்தல் மற்றும் விநியோகித்தல்


யு.எஸ்.எஸ் தேர்வுக்கான வினாத்தாள்களை தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல்களை தேர்வுகள் துறை செய்யும். மலையாளம், ஆங்கிலம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தேவையான வினாத்தாள்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் தயாரித்து விநியோகிக்கிப்பர்.


6. தேர்வு மையம்


தேர்வு மையம் துணை மாவட்டத்தில் வசதியான உ.பி. பள்ளியாக இருக்க வேண்டும். தேர்வு மையத்தின்  தலைவர், துணைத் தலைவர் மற்றும் இன்விஜிலேட்டரின் நியமனம் AEO இன் பொறுப்பாக இருக்கும். (A.E.O. அவர்களின் தேர்வுக் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து  தேர்வு மையத்தின்  தலைவர், துணைத் தலைவர் மற்றும் இன்விஜிலேட்டர்களை நியமனம் செய்ய வேண்டும்.)


ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் தேர்வு எழுதலாம். இதனால், ஒரு மையத்தில் 200 மாணவர்கள் வரை தேர்வுக்கு அமரலாம். 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்டெனில், உப மாவட்ட அளவில் பல மையங்கள் இருக்க வேண்டும். 


ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒரு தலைவர் மற்றும் துணைத் தலைவரும் இருக்க வேண்டும்.   அருகிலுள்ள துணை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக தலைவரும் துணைத்தலைவரும் இருக்க வேண்டும்.


 இன்விஜிலேட்டர்களாக நியமிக்கப்படுபவர்கள்: அருகிலுள்ள உப மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள்களாக இருக்க வேண்டும்.


எஸ்.எஸ்.எல்.சி மதிப்பீடு நடைபெறும் பள்ளிகளை யு.எஸ்.எஸ் தேர்வு மையங்களாக்குவதை   முடிந்தவரை தவிர்க்க வேண்டும் 


7. மதிப்பீடு 


OMR தாள்களைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதற்கேற்ப மதிப்பீட்டை மேற்கொள்ள தேர்வுகள் துறை நடவடிக்கை எடுக்கும். காலை தேர்வின் விடைத்தாள்களை (ஓஎம்ஆர்) மதியத்திற்கு முன் எந்த சேதமும் இல்லாமல் பேக் செய்து சீல் வைக்க வேண்டும் மற்றும் பிற்பகல் தேர்வின் விடைத்தாள்களை (ஓஎம்ஆர்) பேக் செய்து ஒரே நாளில் சம்பந்தப்பட்ட டி.இ.ஓ.  விற்கு வழங்கப்பட வேண்டும். தேர்வு வாரியம் இந்த விடைத்தாள்களை நேரடியாக டி.இ.ஓவிலிருந்து சேகரிக்கும். OMR தாளின் மாதிரி இணைக்கப் பட்டுள்ளது. இது ஒரு OMR மாதிரி தேர்வு என்பதால் மறுமதிப்பீடு இருக்காது.



 உதவித்தொகைக்கான தகுதி 


இரு தாள்களுக்கான மொத்த 90 மதிப்பெண்களில் 63 மதிப்பெண்கள் (70%) அல்லது அதிகம் பெற்றால், உதவித்தொகைக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். 


8.  திறமையானவர்களை தேர்வு செய்தல் 


ஸ்கிரீனிங் சோதனை முறைக்கு பதிலாக, திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு யுஎஸ்எஸ் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்யலாம். அத்தகைய தேர்வினை நடத்துவதில் இடஒதுக்கீடு கொள்கைகளை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலிருந்தும் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


பொதுப் பிரிவு - 15 

OEC                 -

எஸ்சி                 - 2

எஸ்.டி                 - 2. 

  CWSN                 - 1

-------------------------------------------------------------------------

மொத்தம்         - 20


OEC பிரிவில் குழந்தைகள் இல்லை என்றால், பொது வகையைச் சேர்ந்த ஒருவரைக் கருதலாம். எஸ். சி. பிரிவில் மாணவர்கள்கள் இல்லாமல் உயர் தரத்தைப் பெற்ற ஓ.இ.சி.க்கு மாற்றாக, பொது பிரிவில் உள்ள ஒரு மாணவர் கருதப்படலாம். எஸ்.டி பிரிவு மாணவர்கள்கள் இல்லை என்றால், மேலும் ஒரு எஸ்.சி மாணவர் அனுமதிக்கப்படுவார் . இந்த பிரிவுகளில் மாணவர்கள் இல்லை என்றால், ஒருவரை பொது வகையிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். முன்பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பிரிவிலும் குழந்தைகள் இல்லை என்றால், பொது வகையிலிருந்து அனைவரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், மொத்த மதிப்பெண்கள் ஒரே போல் வந்தால் டை பிரேக்கிற்கு கணித த்தில் பெற்ற மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படும்.


குறிப்பு: - அரசு அல்லது தேர்வு ஆணையரின் உத்தரவுக்கு உட்பட்டு திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்கள் மாறக்கூடும்.


யு.எஸ்.எஸ். தேர்வு: - துணை மாவட்டத்தில் தேர்வு மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் / தலைமை கண்காணிப்பாளராக இருப்பார். துணைத் தலைவர்  துணைக் கண்காணிப்பாளராக இருப்பார். குறிப்பிட்ட மையத்தில் தேர்வுக்கு வரும் மாணவர்களின்  பள்ளிகளிலிருந்துள்ள ஆசிரியர்கள் அல்லாதவர்களை  இன்விஜிலேட்டர்களாக  துணை மாவட்ட அதிகாரிகள் நியமிக்க வேண்டும். 


அனைத்து தேர்வுகளிலும் இன்விஜிலேட்டர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் நெருங்கிய உறவினர்கள் யாரும் தேர்வு அறையில் இல்லை என்பதை தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும். தேர்வு மையத்தில் உறவினர்கள் யாராவது இருந்தால், தேர்வைத் தொடங்குவதற்கு முன், இந்த விஷயத்தை தலைமை கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது சம்பந்தமாக, இன்விஜிலேட்டர்களிடமிருந்து ஒரு decleration பெறப்பட வேண்டும். 


9. முடிவுகளின் அறிவிப்பு


OMR மதிப்பீட்டிற்குப் பிறகு, தேர்வுகள் துறை மாவட்ட அளவில் முடிவுகளை  மே 31 க்குள் வெளியிடும். 


10. சான்றிதழ் மற்றும் உதவித்தொகை தொகை வழங்குதல்.


யுஎஸ்எஸ் தேர்வுக்கான சான்றிதழ்கள் தேர்வுகள் துறையிலிருந்து வழங்கப்படும். உதவித்தொகை அடுத்த கல்வியாண்டில் வழங்கப்படும்.


11. பொது வழிமுறைகள்


தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள், வினாத்தாள், தேவையான படிவங்கள் போன்றவற்றை தேர்வுகள் துறை தயாரித்து வழங்கும்.


கல்வி அதிகாரிகளுக்கு துணை மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தேர்வில் ஏற்படும் மாற்றங்களை முன்னரே தெரிவிக்க உப மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர்களின் கூட்டத்தில் புதிய முறைகள் விளக்கப்பட வேண்டும். எஸ்.ஆர்.ஜி கன்வீனர்களுக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். 


தேர்வு நடத்துவதில் ஈடுபட்டுள்ள தலைமை மற்றும் துணைத் தலைவர்களுக்கு மாவட்ட அளவில் டயட் தலைமையிலான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.


 தேர்வு நடைபெறும் நாளில் அந்தந்த மையங்களில் தேர்வுக் குழு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்வு நடவடிக்கைகளை மாவட்ட அளவிலான தேர்வுக் குழு கண்காணிக்க வேண்டும். 


OMR தேர்வு எழுதும் பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இணக்கமான  பயிற்சி அளிக்க மாவட்ட அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


நல்ல முறையில் தேர்வினை நடத்துவதற்காக அனைவரும் இதில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை சரியாகக் கடைபிடிக்க வேண்டும்.


Rate this article

Loading...

Post a Comment

Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Cookies Policy

We employ the use of cookies. By accessing Lantro UI, you agreed to use cookies in agreement with the Lantro UI's Privacy Policy.

Most interactive websites use cookies to let us retrieve the user’s details for each visit. Cookies are used by our website to enable the functionality of certain areas to make it easier for people visiting our website. Some of our affiliate/advertising partners may also use cookies.

Bookmark